செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நோய்களுக்குக் காரணம் என்ன? இயற்கை மருத்துவ விளக்கம்

அண்மையில் இயற்கை மருத்துவ நிபுணர் ஏ.வி.ஜி.ரெட்டி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். நோய் வரும் காரணம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயற்கை மருத்துவர் பீச்சாம்ப் பற்றி அவர் கூறினார்.
பீச்சாம்பும் லீயி பாஸ்டரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். நோய்கள் வருவதற்கு நோய்க் கிருமிகளே காரணம். நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் எனப்படும் எதிர் உயிரிகளை உடலுக்குள் செலுத்தினால் கிருமிகள் அழிந்துவிடு்ம், நோய் நீங்கும் என்பது லூயி பாஸ்டரின் தத்துவம். ஆனால் பீச்சாம்பின் தத்துவம் இதற்கு நேர் எதிரானது.
நோய்க்குக் கிருமிகள் காரணம் அல்ல. கிருமிகளை அழிப்பதால் மட்டும் உடல் நலம் பெற முடியாது. உண்மையில், உடல் கழிவுப் பொருள்களை அகற்றுவதற்காகவே கிருமிகள் உடலில் வந்து தங்குகின்றன என்றார் பீச்சாம்ப். உடலைக் கழிவுகளற்றுச் சுத்தமாக வைத்துக் கொள்வதே ஆரோக்கியத்துக்கான வழி என்றும், நோய் வராமல் இருப்பதற்கான வழி என்றும் அவர் கூறினார். அப்படியானால் நோய் வந்ததும், கழிவுகளை அகற்றும் பணியைத்தான் மருத்துவர் செய்ய வேண்டுமே தவிர, கழிவுகளை நாடி வந்த நோய்க்கிருமிகளைக் கொல்லும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றார் பீச்சாம்ப். சில உதாரணங்கள் மூலம் அவர் இதை நிரூபித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், என்ன நடந்ததோ மரத்தில் கட்டிவைத்து அவர் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாம் இன்னமும் எதிர் உயிரிகளை நம்பிக் கொண்டு கழிவுகளுடனும் கிருமிகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக