திங்கள், 28 ஜூன், 2010


வலைப் பதிவுலக அன்பர்களுக்கு. 


வணக்கம். இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இயற்கை உணவு முறைகளையும், இயற்கை மருத்துவத்தை பற்றியும் பேசுவது சரியில்லை என்கிற எண்ணத்தில் இயற்கை மருத்துவ தத்துவங்கள் பற்றிய திரு.மகரிஷி க.அருணாசலம் அவர்களது புத்தகத்தினை தட்டச்சு செய்து வெளியிட்டேன். படித்து பின்னூட்டம் தந்தவர்களுக்கு எனது இதய நன்றி. பொறுமையுடனும் ஆர்வத்துடனும் படித்து வரும் அன்பர்களுக்கும் என் நன்றி.

இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகளை மேலும் எடுத்துச் சொல்லும் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளான அமரர் ம.கி.பாண்டுரங்கன், அமரர் மு.இராமகிருஷ்ணன், மற்றும் இப்போது எனது வழிகாட்டிகளாகவும், இயற்கை நலவாழ்வியல் வாழ்ந்து காட்டிகளாக விளங்கும் திருவாளர்கள் மூ.ஆ.அப்பன், யோகி தி.ஆ.கிருஷ்ணன், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க செயலர் திரு.இர.இராமலிங்கம், திரு.ஸ்ரீராமுலு (மதுராந்தகம் தண்டரைபேட்டை) ஆகியோருடைய படைப்புகள், பேட்டிகள் போன்றவற்றை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

மேலும் வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும் தமிழில் மொழி பெயர்க்க ஒரு ஆசை உண்டு. நேரம் கிடைக்குமா அதற்கான தெம்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. 

ஜூலை மாதம் முதல் வாரத்தில் துவங்கும் அமர்நாத்-வைஷ்ணோதேவி யாத்திரைக்கு சென்று வந்த பின்னர் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை துவக்க இருக்கிறேன்.

இறையருள் துணை நிற்க வணங்குகிறேன். 

வாழி நலம் சூழ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக