செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010


மாதுளம் பழ ஜூஸ் ஆக்ஸிஜனேற்றத்தை சீராக்கும்.

பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.

எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.  

அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற ப்ழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.  

இதனால் மாதுளம் பழச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.   

கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது. 

உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. 

முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது. 

அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது. 

மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. 

தவிர, குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.

நன்றி: வெப்துனியா தமிழ்

2 கருத்துகள்:

என்னது நானு யாரா? சொன்னது…

நண்பரே! வணக்கம்!

நீங்கள் அருமையான சித்த மற்றும் இயற்கை மருத்துவத்தை பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள். எல்லா பதிவுகளையும் படித்து பார்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com நீங்கள் கட்டாயம் வரவேண்டும். நானும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளை தொடர்ந்து பதிவுகள் எழுதி வரும் புதிய பதிவு எழுத்தாளன். தொடர்ந்து பதிவுகளை படித்து, உங்களின் கருத்துக்களை இட வேண்டும். இப்போது உங்களின் வலைபக்கத்தை எப்படி தொடர்வது? google connect-ல் சென்று Followers Widget-ஐ பெற்று கொள்ளவும். உங்களை தொடர விரும்புவர்களில் நானும் ஒருவன் . நீங்களும் என் வலைபக்கத்தைல் தொடர்பவராக இணைய அழைப்பு விடுக்கின்றேன். எல்லோரும் சேர்ந்து பணி செய்வோம்!

நன்றி! வாழ்க வளமுடன்!!

Ashwin Ji சொன்னது…

நண்பருக்கு வணக்கம். பாராட்டுக்கும், பின்னூட்டத்துக்கும் இதய நன்றி.
தங்கள் வலைப்பதிவை கண்டபின் பின்னூட்டம் இடுகிறேன். நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா? ஆம் எனில் வருகிற செப்டம்பர் பனிரண்டாம் திகதி ஒரு நாள் இயற்கை நலவாழ்வு முகாம் நடக்க இருக்கிறது. தேவை எனில் கலந்து கொள்ளுங்கள்.

--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

கருத்துரையிடுக