வியாழன், 9 டிசம்பர், 2010

16.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
 
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
 
பகுதி 15: 25.  உண்ணா நோன்பு:
 
மேலும் தொடர்கிறது....

27. ஜீரண சக்தியை அதிகரிக்க
ஜீரணசக்தி குறைபாடுள்ளவர்கள் தினமும் 2 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்தலாம்.  ஜுஸ் எடுத்து ஒரு சிறு கிண்ணத்திச் வைத்து  சிறிது நேரம் (15 நிமிடம்) கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.  (அடியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருளை உண்ணக்கூடாது)  ஒரு ஸ்பூன் தேனுடன் அருந்த வேண்டும்.  அல்சர் நோயளிகளுக்கு இது தேவையில்லை.  அவர்கள் ஜீரகத்தை மெல்லலாம்.  மேலும் ஜீரகம், மிளகு,  கொத்தமல்லி விதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரும் அருந்தலாம். (வெதுவெதுப்பாக).

28. சிறுநீரகநோயாளிகள்தண்ணீர் அருந்தலாமா?
சாறுள்ள பழங்களை மட்டுமே உண்டு வந்தால் சிறுநீரக நோயாளிகள் தாக உணர்வு தோன்றும் போது தண்ணீர் அருந்தலாம்.   சாறுள்ள பழங்களை மட்டுமே உண்பதால் தாக உணர்வும் கம்மியாகவே இருக்கும்.  கிட்னி பாயிண்டில் கைகளிலும், கால்களிலும் அக்குபிரஷர் அ ழுத்தம் கொடுக்கலாம்.  சர்க்கரையும், உப்பும் அறவே சேர்க்கக்கூடாது.சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் நிறைய தண்ணீர் கல் கரையும் வரை அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். உடலில் உள்ள  கால்சியத்தை கிரகித்துக் கொள்ளூம் தன்மை குறைவாக இருப்பதாலும் பால், பால் பொருட்களை அதிகமாக உண்பதாலுமே கற்கள் உண்டாகிறது.   இதற்கு அக்கு பிரஷரில் தைராய்டு மற்றும் கிட்னி பாயிண்டில் அழுத்தம் கொடுத்தால் விரைவில் குணம் அடையலாம்.  (மேலும் விவரங்களுக்கு நம்  நலம் நம் கையில் பாகம்1 & தேவேந்திர வோரா).  வாழைத்தண்டு ஜுஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவும்.  பழரசங்களை மட்டுமே அருந்தி வந் தால் விரைவில் குணம் கிடைக்கும். 
 
மண்பானையிலும், ஈயம் பூசப்படாத செம்பு பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள நீரை அருந்துவது நல்லது. துளசி இலைகளை த ண்ணிரில் போட்டும் அருந்தலாம்.

29. எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?
இயற்கை உணவு உட்கொள்பவர்களூக்கு தண்ணீர் அருந்த அளவு பார்க்க வேண்டியதில்லை.  தாக உணர்வு தோன்றுபோதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்.  உடலை தூய்மைபடுத்த தினமும் 3-to-5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது சமையலுணவில் இருப்பவர்களுக்கே  பொருந்தும்.

30. இயற்கை உணவுக்கு மாறமனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி?
(1) அக்கு பிரஷர் செய்யவும்.  நாளமில்லா சுரப்பிகளிலும், பலவீனமான உறுப்புகளுக்குரிய பாயிண்டுகளிலும் அழுத்தம் கொடுக்கவும்.  நாளமில்லா  சுரப்பிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் எளிதில் மனஉறுதி பெற உதவும்.
(2) தியானம்.
(3) இயற்கை உணவு குறித்து தினமும் 2 பக்கங்களாவது படிக்கவும்.
(4) இயற்கை உணவு உட்கொள்பவர்களோடு தொடர்பு வைத்திருக்கவும்.

31.   மன ரீதியாக தயாராதல்
பள்ளிக்கு குழந்தைகள் செல்ல தயாராவது போல ஒருவர் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் முன்னர் மனரீதியாக தயாராக  வேண்டும்.  இந்த கட்டுரை இயற்கை உணவு பற்றி புரிந்து கொள்ள ஓரளவு உதவியாக இருக்கும்.  ஆர்வமுள்ளவர்கள் வலைதளம் மற்றும் புத் தகங்கள் மூலம் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிய தெரிய அவரால் தன்  உடலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பின் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கவனிக்க முடியும்.  கழிவுகள் வெளியேற்றத்தை கண்டு  அஞ்ச மாட்டார்கள்.  எனவே நோயிலிருந்து குணமடைய இயற்கை உணவு உண்பவர்கள் இயற்கை உணவு குறித்து நன்றாக புரிந்து கொண்டு  மனரீதியாகவும் தயாராக வேண்டும்.  நோயாளிகளின் ஒத்துழைப்பு குணமடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயற்கை உணவு உட்கொள்பவர் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே மனதில் வைத்திருக்க வேண்டும்.  ’நான் குணமடைய  போகிறேன்’, ’நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்’ போன்றஎண்ணங்களை மனதில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  இயற்கை  உணவு உண்பது குறித்து கேலி, கிண்டல் செய்வோரை விட்டு விலகி இருக்கவும்.  நன்றாக சிரிக்கவும்.  நன்றாக சிரிப்பவர்கள் எளிதில்  நோய்வாய்ப்படுவதில்லை.
(தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக