வியாழன், 1 செப்டம்பர், 2011

கட்டுப்படுத்த முடியாத சர்க்கரையா?

100% சக்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா? 

இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
பொதுவாகவே மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அதாவது, மருத்துவர் உணவு இப்படியெல்லாம் சாப்பிடவேண்டும் என்று ஒரு கதைபோல் சொல்லுவார். நோயாளியும் வெகு சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் சொன்னதில் பாதிதான் நோயாளிக்குப் புரிந்திருக்கும்.

மருத்துவரைச் சந்தித்து நான்கு நாட்கள் கழித்து யோசித்தால் அதிலும் பாதி மறந்து போய் இருக்கும். இந்த இடைவெளியை நிரப்புவதில்தான் சக்கரையைக் குறைப்பதற்கான சூட்சுமம் இருக்கிறது.

இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் நாம் உணவின் சத்துக் குறிப்பீடு பற்றி அறியவேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இத்தனை கிராமுக்கு இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்ற அளவுதான் அது.

ஏன் இது முக்கியம் என்று கேட்கிறீர்களா? மருத்துவர் மதியம் ஒரு கப் சாதம் அல்லது ஒரு பிளேட் சாதம் சாப்பிடுங்கள் என்று கூறுவார். ஆனால் எவ்வளவு பெரிய கப், எவ்வளவு பெரிய தட்டு என்று அளவு தெரியாது.

உதாரணத்துக்கு கார்த்தி, ஸ்ரீதர்,அன்பு என்று மூன்று பேர் வீட்டிலிருந்து அவர்கள் சாப்பிடும் தட்டைபோய்ப் பார்த்தால் கார்த்தியின் தட்டு பெரிதாகவும் ஸ்ரீதரின் தட்டு நடுத்தரமாகவும் அன்புவின் தட்டு சிறியதாகவும் இருக்கும்.(ஒரு குத்து மதிப்பாகக் சொல்கிறேன்!!)

அதே போல் கப்பின் அளவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். இது போல் இட்லி.தோசை சப்பாத்தி ஆகியவற்றின் எடை, அளவுபற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. இதற்கு என்ன செய்யவேண்டும்?

உண்வை எடைபோட்டுச் சாப்பிடவேண்டும்! சக்கரை நோயாளிகள் அனைவரும் இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்றால் எல்லோரும் செய்தால் நல்லதுதான்.

ஆனால் யாருக்கு இத்தகைய கட்டுப்பாடு மிகவும் அவசியம்?

1.உடல் எடை குறையாமல் இருப்போர்

2.இன்சுலினைக் குறைக்க விரும்புவோர்

3.இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற விரும்புவோர்

4.சக்கரை கட்டுப்பாட்டில் இல்லாதோர்

 5.சக்கரை நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோர்

6.எச்.பி.ஏ.1.சி-இரத்தப் பா¢சோதனை-7%க்கு மேல் உள்ளோர்.

எப்படி, எவ்வளவு எடைபோட்டு சாப்பிடவேண்டும் என்று பார்ப்போம்.

காலை டிபன்-150 கிராம்

மதியம்-250 கிராம் சாதம், இரவு-150 கிராம் டிபனுடன் 100 கிராம் பழங்கள்,100கிராம் சுண்டல்
மூன்று வேளையும் 200கிராம் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு அவசியம் ஒரு நிறுக்கும் தராசு வேண்டும்.

அதே போல் தினமும் எடை போடவேண்டும். இப்படி எடை போட்டு சாப்பிட்டு வீட்டிலேயே சுய பரிசோதனைக்கருவி மூலம் இரத்த சக்கரை அளவைக் கணித்து அதன் படி உணவின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

நினைவில் கொள்ளவும்- சக்கரை 24 மணி நேரமும் சரியான அளவு இருந்தால்தான் சக்கரை வியாதியின் பின் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்.

நன்றி: தமிழ்த்துளி வலைப்பூ. செல்க : http://abidheva.blogspot.com/2009/11/blog-post_21.html

எனது கருத்துக்கள்:
இயற்கை நலவாழ்வியல் தத்துவங்களைப் பின்பற்றுவதின் மூலமும் சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக