சனி, 16 நவம்பர், 2013

சர்க்கரை நோய்

உடலுழைப்பு குறைந்து உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலை பார்க்கும் நிலை தற்போது அதிகம் உள்ளது. எளிதாக வேலை செய்பவர்கள் எடுத்து கொள்ளும் உணவு வகைகள் கொழுப்பு, புரோட்டின்கள் மற்றும் சர்க்கரை நிறைந்தாக மாறி விட்டன.
உண்ணும் உணவு ஜீரணமாவதற்குள் அடுத்தடுத்து தொடர் உணவுகளை சாப்பிடுவதால் மனித உடலில் கலோரிகள் செலவழிக்காமல் மீண்டும் கலோரிகள் சேரும் போது உடல் எடையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சேர்ந்து பல நோய்களுக்கு அடித்தளமிடுகிறது. 

தற்போது சர்க்கரை நோய் 10 வயது சிறுவர்கள் முதல் 70 வயது முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை. இந்நோயை முழுதும் குணமாக்க முடியாததால் உணவை கட்டுப் பாட்டில் வைத்து காலம் தள்ள வேண்டிய நிலையில் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இதற்கான பல ஆங்கில மருந்துகள் இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத மருந்தாக இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் தயாரித்த சித்த மருந்துகள், நாட்டு மருந்துகள் பயன்படுகின்றன. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு தயாரிக்கும் கூட்டு மருந்துகளில் ஆவாரை மற்றும் நாவற்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
ஆவாரையின் அனைத்துப் பகுதிகளும் மருந்து தயாரிக்க பயன்படுகின்றன. இம்மருந்துகள் சர்க்கரை நோய், நாவறட்சி, வெள்ளை படுதல், உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், நீனைக் கழிச்சல், கற்றாழை நாற்றம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றன. ஆவாரம் பூவை வதக்கி சமைத்தும் சாப்பிடலாம். ஆவாரை பஞ்சாங்கம் எனப்படும் ஆவாரையின் பூ, கொழுந்து, காய், பட்டை, வேர்பட்டை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களை குணப்படுத்தும். 

நாவல் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. 
இம்மருந்துகளை சாப்பிட்டால் பசியைத் தூண்டி, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதன் விதையை சூரணம் செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிற்று போக்கு போன்றவைகளை குணப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக